Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ... களைகட்டிய கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா; அலைமோதும் பக்தர்கள் களைகட்டிய கவுமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தங்கலில் முற்கால பாண்டியர் கால நடுகல் சிற்பம், கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திருத்தங்கலில் முற்கால பாண்டியர் கால நடுகல் சிற்பம், கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

14 மே
2023
03:05

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாரயண பெருமாள் கோயில் அருகே மேல மாட வீதியில் முற்கால பாண்டியர் காலத்து நடுகல் சிற்பம் , வட்டெழுத்து கல்வெட்டை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் மேல மாட வீதியில் பாறையில் வெட்டப்பட்ட புடைப்பு சிற்பத்துடன் கூடிய முற்கால பாண்டியர் காலத்து நடுகல் சிற்பம் மற்றும் தலைகீழாக உள்ள வட்டெழுத்து கல்வெட்டு ஆகியவை 1922 ல் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டது. மீண்டும் 2005 ல் தொல்லியல் துறையால் பதிவு செய்துள்ளது. ஆனால் தற்போது சிற்பம் மண்ணில் புதைந்து மறைந்த நிலையில் உள்ளதாக திருத்தங்கலை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் பாலசந்திரன் கலெக்டர் ஜெயசீலனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கலெக்டர் சிற்பம் உள்ள இடத்தை கண்டறிய மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கமிஷனர், மாநகராட்சி அலுவலர்களுடன் நேரடியாக சென்று மேல மாட வீதி பகுதியில் நடுகல் சிற்பம் உள்ள இடத்தை தேடினர். பெருமாள் கோயில் மண்டம் அருகே மண்ணில் புதைந்து இருந்த நடுகல் சிற்பம், வட்டெழுத்து கல்வெட்டு ஆகியவற்றை கண்டறிந்து மீட்டனர். அந்த கல்வெட்டில் போரில் வீரமரணம் அடைந்த வீரருக்கு ரத்தக்காணியாக நிலம் வழங்கிய தகவல் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தோண்டும் பணி நடந்து வருகிறது. சுகாதார ஆய்வாளர் பாண்டியராஜன், தாசில்தார் லோகநாதன், வி.ஏ.ஓ பாண்டி மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கண்டெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன்  ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar