சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தெப்போற்சவம் எனப்படும் தெப்பத் திருவிழா நடந்தது. சிவகாசி, பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா மே. 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மன் சிம்மம் காமதேனு, வேதாளம், கைலாச பருவதம் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொங்கல், கயறு குத்து திருவிழா முடிந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்நிலையில் திருவிழாவில், கடைசி திருவிழாவிற்கு மறுநாளில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தெப்பத்தில் தெப்போற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.