பழநி; பழநியில் வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பழநியில் வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு போகர் ஜெயந்தி விழா, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது.சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடத்தப்பட்டது. போகர் திருவுருவ ம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது இதில் பேரவை நிறுவனத் தலைவர் செந்தில் தலைமையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பழநி, ஆயக்குடி அருகே பொன்னிமலை அடிவாரத்தில், போகர் சித்தர் கோயிலில் 16 வகை அபிஷேகங்கள் சித்தர் திருவுருவத்திற்கு நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், தீபாதாரணை நடந்தது குழுத் தலைவர் அறிவழகன் தலைமையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.