கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி புனித சவேரியார் ஆலய சப்பர பவனி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேம்பார்பட்டி புனித சவேரியார் ஆலய விழா கடந்த மே 16 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறுநாள் இரவு சப்பரபவனி நடந்தது. நேற்று சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து மதியம் சவேரியார் ஆலயத்தில் இருந்து பகல் சப்பரபவனி தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதைக் காண சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானூர் கலந்துகொண்டு உப்பு, மிளகு உள்ளிட்டவைகளை காணிக்கையாக வழங்கி வழிபட்டனர். மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வேம்பார்பட்டி ஜமாத்திலிருந்து இஸ்லாமியர் சார்பாகவும், இந்து அமைப்பினர் சார்பாகவும் சப்பரபவனியை வரவேற்று கருப்பட்டி, வெள்ளரி, வாழைப்பழம் உள்ளிட்ட பல பொருட்களை காணிக்கையாக வழங்கி வரவேற்றனர். இதைப்போலவே கொசவபட்டி புனித உத்திரிய மாதா சர்ச்சில் 40-ம் நாள் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி பகல் மற்றும் இரவு சப்பரபவணியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று சப்ரபாணியை தொடர்ந்து கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் வான வேடிக்கை நடந்தது.