பதிவு செய்த நாள்
19
மே
2023
05:05
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணம் கோயில் எதிரே அமைந்துள்ள, சக்கர தீர்த்த குலத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் பக்தர்கள், நவபாஷாண கடலில் நீராடி, நவக்கிரகங்களை சுற்றி வந்த பிறகு, கோயில் எதிரே உள்ள சக்கர தீர்த்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சக்கர தீர்த்த குளத்தில் தேங்கிய தண்ணீர் அகற்றப்படாததால், சக்கர தீர்த்த குலத்தில் தண்ணீர் மாசடைந்து, பச்சை நிறத்தில் மாறி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், சக்கர தீர்த்த குளத்தில் குளிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அச்சத்தில், சக்கர தீர்த்த குலத்தில் நீராடுவதற்கு பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சக்கர தீர்த்த குலதட சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.