சாத்தூர்; இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, முன்னிலையில் கோயிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல்கள், 1 கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. மகளிர் சுய உதவி குழு பெண்கள் கோயில் அலுவலர்கள் காணிக்கை பொருளை கணக்கிட்டனர். பக்தர்கள் உண்டியலில் ரொக்கம் ரூ 37, 26, 024, தங்கம் 151 கிராம், வெள்ளி 971 கிராம் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அருப்புக்கோட்டை ராஜபாளையம் சரக ஆய்வாளர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.