விருத்தாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ 25 லட்சம் மதிப்புள்ள கோவில் நிலம் மீட்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 05:05
பெரம்பலுார், பெரம்பலுார் அருகே, கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா வெங்கனுார் விருத்தாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரியமாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள 0.88 சென்ட் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, இந்து சமய அறநிலைத்துறை திருச்சி இணை ஆணையர் செல்வராஜுக்கு புகார் வந்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை பெரம்பலுார் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெரியம்மாபாளையம் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான வெங்கனுார் விருத்தாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்புபாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று போர்டு வைக்கப்பட்டது.