பதிவு செய்த நாள்
20
மே
2023
10:05
திருப்பூர்; ருத்ரபிரயாக்கில் உள்ள ஸ்ரீகார்த்திகேய சுவாமி கோவிலில், 108 சங்காபிஷேக வழிபாடு, கந்த யாஹ பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில், ஸ்ரீகார்த்திகேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஸ்ரீ தர்ம சாஸ்தா காசி யாத்திரை குழுவினர் சார்பில், 108 வலம்புரி சங்காபிஷேக வழிபாடு, ஸ்தாபனம், கந்த யாஹ பெருவிழா, சமீபத்தில், நடத்தப்பட்டன. ஸ்ரீ தர்ம சாஸ்தா காசி யாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர் ஆரூர் சிவம் கூறியதாவது: கந்த புராணத்தில் க்ரவுஞ்ச பர்வதம் என குறிப்பிடுவது, இந்த மலையை தான். அதாவது, கிரீடம் தரித்தவன் என்பது பொருள். திருப்பரங்குன்றம் மற்றும் சுவாமி மலை முருகப் பெருமானுக்கு சாற்றிய வஸ்திரங்கள், ஸ்ரீகார்த்திகேய சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. உத்தரகாண்ட் மாநிலமே தெய்வ பூமிதான்; புராணம், இதிகாசங்கள் நிறைந்த இடம். அங்குள்ள முருகன் கோவில், அதன் சிறப்பு, மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. அதை பிரபலப்படுத்தும் வகையில், அம்மாநில சுற்றுலாத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். பிரதமரின் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமி, கோவை - பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், மயிலை ஆதீனம் திருஞானநந்த சுவாமி, சிரவையாதீனம் குமரகுருபர சுவாமி, ஆதீனம், உத்தரகாண்ட் மாநில அரசின் சுற்றுலாத்துறை கூடுதல் செயலர் ரவிசங்கர் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.