சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2023 12:05
மயிலாடுதுறை: மாமாகுடியில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாகுடி கிராமத்தில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன்னுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு குளக்கரையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.