நத்தம் பகவதி அம்மன் கோவில் திருவிழா; திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2023 12:05
நத்தம், நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோவில் 40 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா கடந்த மே 15 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரமும் நடந்தது. நேற்று மதியம் கோவிலில் அன்னதான விழா நடந்தது. அன்னதானத்தை நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் மே23 அக்னி சட்டி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்துவர்.