ஆளவந்தாரின் சீடர்கள் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரம் பற்றியும் தனக்கு பிறகு வைணவத்தை காக்க வரும் ராமானுஜருக்கு உபதேசிக்கவும் அறிவுறுத்தி இருந்தார். இருந்தாலும் தகுதி பார்த்தே உபதேசிக்க வேண்டும் என விதிமுறை வகுத்திருந்தார் ஆளவந்தார். ராமானுஜரை பதினெட்டுமுறை சோதித்த பின்னரே எட்டெழுத்து மந்திரத்தின் அர்த்த்தை சொன்னார். மேலும் இது பரமரகசியம் எனவும், இதை "யாருக்கும் சொல்லக்கூடாது" எனவும் கட்டளையிட்டு இருந்தார். ஆனால் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி அனைவருக்கும் கேட்கும்படி, எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் கோபமுற்ற திருக்கோஷ்டியூர் நம்பி ரகசிய மந்திரத்தை இப்படி சொல்வது குருவிற்கு செய்யும் துரோகம். அதனால் நரகம் புக நேரிடும் என சொன்னார். அதற்கு ராமானுஜரோ எல்லோரும் முக்தியடையவதாலும் நான் ஒருவன் மட்டும் நரகத்திற்குச் செல்வது என் பாக்கியமே என சொன்னார். இதைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, பெருமாளின் கருணை விட உமது கருணை உயர்வாகி விட்டதே என பாராட்டினார். வைகாசி மாதம் ரோகிணி அன்று திருக்கோஷ்டியூர் நம்பிகளின் திருநட்சத்திரம் (மே.20.,2023) வைணவத்தலங்களில் இவருடைய திருநட்சத்திரம் சிறப்பாக கொண்டாடப்படும்.