வைகாசி சனி: லக்ஷ்மி நாராயணன், மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2023 01:05
கோவை : கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் வைகாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவிலில் உள்ள லக்ஷ்மி நாராயணன் மகாலட்சுமி தாயார் சன்னிதியில் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி லட்சுமி நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.