மாரியூரில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2023 05:05
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயில் உள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த தளமாக விளங்குகிறது. வைகாசி அமாவாசையை முன்னிட்டு பூவேந்திய நாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் யாக வேள்வி நடத்தப்பட்டது. ரிஷப வாகனத்தில் சுவாமி உள்வீதி புறப்பாடு நடந்தது. கோயிலில் உள்ள பழமை வாய்ந்த ஸ்தல விருட்சமாக விளங்கும் முன்னை மரத்தின் முன்பாக முன்னோர்களை நினைத்து ஏராளமான பக்தர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். முன்பாக மாரியூர் மன்னர் வளைகுடா கடலில் ஏராளமானோர் புனித நீராடினர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.