பதிவு செய்த நாள்
20
மே
2023
05:05
அன்னூர்: காட்டம்பட்டி, தன்னாசியப்பர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. காட்டம்பட்டி அருகே பார்வதிபுரத்தில், உமா சுத விநாயகர், கருப்பராயன், தன்னாசியப்பர், சப்த கன்னிமார் மற்றும் நாகர் சுவாமிகளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. நாளை (21ம் தேதி) காலை 8:00 மணி முதல் 8:30 மணிக்குள், அனைத்து தெய்வங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, இறையருள் பெற விழா கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பூச்சொரிதல் விழா
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி முத்துப்பட்டினம் லோகநாயகி அம்பாள் கோயில் 71வது ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நேற்று நடந்தது. மேட்டுப்பட்டி செல்வகணபதி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கோயில் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ச்சியும், அலங்கார மின்னொளிரதம், பூத்தட்டுகள் புறப்படும் நிகழ்ச்சியும் நடந்தது.