சிவகாசி பகுதியில் கோயில்களில் அகற்றப்படாத குப்பைகள் பக்தர்கள் முகம் சுளிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2023 11:05
சிவகாசி: சிவகாசி பகுதியிலுள்ள கோயில்களின் முன்புறம், அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படாததால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். கோயிலுக்கு வந்தால் தொற்று நோய் இலவசம் என பக்தர்கள் புலம்புகின்றனர்.
சமீபத்தில் சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு அதிக அளவில் குப்பைகள் சேர்ந்து கோவில் முன்புறம் கொட்டப்பட்டுள்ளது. தவிர சிவகாசி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் முப்பிடாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில் வளாகங்களில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. ஒரு வாரமாக எங்குமே குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் நிம்மதி கிடைக்கும் என கோயிலுக்கு வந்தால் தொற்று நோய் தான் கிடைக்கிறது எனவும் பக்தர்கள் புலம்புகின்றனர். எனவே கோயில் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.