பதிவு செய்த நாள்
21
மே
2023
11:05
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி சிறப்பு ஜமாப் நிகழ்ச்சி நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, கருவறை, அர்த்தமண்டபம், மூன்று நிலை விமானம், ஏக மண்டபம், கன்னிமூல விநாயகர் கோவில், துர்க்கை அம்மன் திருக்கோயில், கன்னிமார் நவகோள்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 24ம் தேதி நடக்கிறது. விழாவை ஒட்டி இன்று முளைப்பாளிகை ஊர்வலம் நடந்தது. மதியம் தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடந்தது. விழாவை ஒட்டி திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அனுமதி பெறுதல், ஐம்பூத வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, எண்திசை காவல் வழிபாடு, புற்று மண் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை ஒட்டி சிறப்பு ஜமாப் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.