பதிவு செய்த நாள்
22
மே
2023
09:05
வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க , வியாபாரம் விருத்தியடைய, கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள். சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது. சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலம். இக்கோயிலில் முழுவதும் சூரிய ஒளியில் இயங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
41 கிலோ வாட் திறன்: வடபழநி ஆண்டவர் கோவிலில், சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன், 25 லட்சம் ரூபாய் செலவில் 41 கிலோ வாட் திறன் கொண்ட, 75 சூரிய மின் சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டன. இந்த சூரிய மின் சக்தி நிலையம் வாயிலாக, தினமும் 150 -- 160 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படலாம். இந்த சூரிய மின் சக்தி துவக்க விழாவில், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், எம்.எல்.ஏ.,க்கள் வேலு, கருணாநிதி, சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன், துணை கமிஷனர் முல்லை ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய சிறப்பு வீடியோவில் சென்னையில் உள்ள வடபழநி கோயில் முழுவதும் சூரிய ஒளியில் இயங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இது தொடர்பான சிறப்பு ஒளிபரப்பு வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
www.youtube.com/watch?v=4vkNtTzFdfc&t=390s