பதிவு செய்த நாள்
22
மே
2023
10:05
காரியாபட்டி: காரியாபட்டி அருகே கள்ளிக்குடி ஒன்றியம் இலுப்பைகுளத்தில் திருவேட்டை அய்யனார் கோயிலில் ராஜ கோபுரம், சேமங்குதிரைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, முதலாம் கால யாகசாலை பூஜையுடன் துவங்கி, இரவு திரவியாகுதி, மஹா பூர்ணாஹுதி முடிந்தவுடன் தீபாதாரணை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையுடன், மண்டப சாந்தி, கோ பூஜை, ஜெப பாராயணம், திரவியாகுதி, ஸபர்ஸகுதி, மகா பூர்ணாஹூதி பூஜையுடன் காலை 9 மணிக்கு புனிதநீர் கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ராஜகோபுரம், சேமங்குதிரைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, திருவேட்டை அய்யனார், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, ராஜகோபுரம், சேமங்குதிரைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.