பிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2023 01:05
திருநெல்வேலி : நெல்லை டவுன்பிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட துவக்க விழாவை முன்னிட்டு டவுனில் பிரசித்தி பெற்ற பிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. கோயில் நடைநேற்று அதிகாலையில் திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. கொடிபட்டம் ரதவீதி வலம் நடந்தது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிட்டாபுரத்தி அம்மன் நெல்லையப்பர் கோயிலுக்கு தேரில் எழுந்தருளும் வைபவம் 29ம் தேதி நடக்கிறது. 30ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது.