திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2023 05:05
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், மு.தூரி, கிடாத்திருக்கை, இளஞ்செம்பூர்,ஏனாதி, வெண்ணீர்வாய்க்கால்,காக்கூர், பூக்குளம்,பரமக்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர். பரமக்குடி திருச்செந்தூர் பாதயாத்திரை குழுவின் சார்பில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.முதுகுளத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு உள்ள ஐயப்பன் கோயிலில் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில் பாதயாத்திரையாக வந்த திருச்செந்தூர் பக்தர்களுக்கு பாதபூஜை செய்து பக்தர்களை வழி அனுப்பினர். அப்போது முதுகுளத்தூர், கடலாடி,சாயல்குடி வழியாக திருச்செந்தூர் ஐந்து நாட்கள் பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.