பழநி: பழநி மலைக்கோவிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பழநி கோயிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலை அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன நெரிசல் ஏற்படுத்தும் வகையில் ஆட்டோகளை இயக்கினர். அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதி வாகன நெரிசல் ஏற்பட்டது. கிரிவீதி, சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தது. பழநியில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர விழா இந்த ஆண்டு மே. 8 முதல் மே. 21 வரை இவ்விழா கடைபிடிக்கபட்டது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கிரிவலம் வந்து மலைக்கோயில் சென்று வழிபடுவர். பழநி கிரிவீதியில் வள்ளி, தேவசேனா முத்துகுமாரசுவாமி சுவாமி புறப்பாடு நடைபெற்றது.