குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா ஜரூர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2023 05:05
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மலையைச் சுற்றி தூய்மைப் பணிகளும், படிக்கட்டுகளும் அமைக்கும் பணிகள் ஜருவராக நடைபெறுகின்றன.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது கும்பாபிஷேக விழா பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் வளாகத்தில் அரண்மனை யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் மலை மீது செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இப்படிக்கட்டு வழியாக, மீண்டும் பக்தர்கள் திரும்பி வந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும். அதனால் மலையிலிருந்து கீழே இறங்குவதற்கு புதிதாக வழி அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த வழியில் படிக்கட்டுகள் கட்டும் பணிகள் நடக்கின்றன. மேலும் மழையை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகம் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணியில், கோவில் நிர்வாகமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.