நயினார்கோவில் மருதவனம் மாகாளியம்மன் கோயில் பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2023 05:05
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் மருதவனம் மாகாளியம்மன் கோயிலில் பால்குட உற்சவம் நடத்தது.
நயினார்கோவிலில் அருள்பாலிக்கும் மருதவனம் மாகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்தது. இதன் படி தினமும் நாகநாதசுவாமி கோயில் எதிரில் உள்ள சந்தியா வந்தன மண்டபத்தில் இருந்து காலை 8:00 மணிக்கு அபிஷேகம் சாமான்கள் மேள தாளத்துடன் புறப்பாடாகியது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மே 20 காலை வெள்ளி சம்ஹாரவேல் புறப்பாடாகி நகர் வலம் வந்து தீப ஆராதனைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் அம்மன் வேடமிட்டவர் அமர்ந்தும், பெண்கள் வேடமிட்டு ஆண்களும் ஆடி வந்தனர். தொடர்ந்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.