பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை ஆதி சக்தி ராஜராஜேஸ்வரி, சந்தன மாரியம்மன் சக்தி பீடத்தில் 15 ஆம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. இக்கோயிலில் மே 15 காலை 10:30 மணி முதல் கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று மாலை 5:00 மணிக்கு அம்பாள் ராஜராஜேஸ்வரி பெருங்கரை கிராமத்திற்கு புறப்பாடாகி வீதி வலம் வந்தார். தொடர்ந்து தினமும் அம்மன் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, சந்தன மாரியம்மன், அர்த்தநாரீஸ்வரி அலங்காரத்தில் அருள் பாலித்தார். மேலும் தினமும் மேல பெருங்கரை, பாலபச்சேரி, ராஜாக்கள்பட்டி உள்ளிட்ட கிராமத்திற்கு அம்மன் வலம் வந்தார். இன்று மாலை 5:00 மணிக்கு அம்மன் மகாலட்சுமி அலங்காரத்திலும் நாளை அதிகாலை 4:00 மணி முதல் பார்வதி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. நாளைமறுநாள் மஞ்சள் நீராட்டு விழா, காலபைரவர் வழிபாடுடன், உற்சவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை விஜேந்திர சுவாமிகள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.