கோவை ; ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் வைகாசி வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கணபதிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு நடைபெற்றது. தங்கக் காப்பு அலங்காரத்தில் மூலவர் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.