ரண பத்ரகாளியம்மன் கோயில் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2023 05:05
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை ரண பத்ரகாளியம்மன் கோயில், வைகாசி விசாக விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக, மூலவர் அம்மனுக்கு கிராம தலைவர் சிங்காரம் முன்னிலையில், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. விழாவின் தொடர்ச்சியாக, தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மே 30ல், பொங்கல் விழாவும், மறுநாள் முக்கிய விழாவான பக்தர்கள் பூக்குழி இறங்குதல் விழாவும், நடைபெற்று, ஜூன் 1ல் நடைபெறும் பாய்மர படகு போட்டியுடன், விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கிராம தலைவர் தலைமையில், கிராமத்தினர் செய்து வருகின்றனர்.