Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ... கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நவபாஷாணம்; தெளிவாக தெரிந்த நவக்கிரகம்
எழுத்தின் அளவு:
கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நவபாஷாணம்; தெளிவாக தெரிந்த நவக்கிரகம்

பதிவு செய்த நாள்

25 மே
2023
04:05

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடல் நீர் உள்வாங்கியதால் நவக்கிரகங்கள் அனைத்தும் வெளியில் தெளிவாக தெரிந்த நிலையிலும், பக்தர்கள் வருகை இன்றி நவபாஷாணம் வெறிச்சோடி காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவக்கிரகம் அமைந்துள்ள பகுதியில், கடந்த சில நாட்களாக கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டதால், நவபாசானத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாலையில் கடல் நீர் உள்ளிழுக்கப்பட்டு, மாலை 3:00மணிக்கு மேல், கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. இந்த நேரங்களில் கடல் நீரில் வழக்கமாக மூழ்கி இருக்கும் நவக்கிரகங்கள் அனைத்தும், தண்ணீர் இன்றி தெளிவாக வெளியில் தெரிந்தன. இதனால், வருகை தந்த பக்தர்கள் அனைத்து நவக்கிரங்களையும் தெளிவாக பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக கிழக்கு கடல் பகுதி அவ்வப்போது, காலையில் உள்வாங்குவதும், மாலையில் கடல் இயல்பு நிலைக்கு வருவதும், வழக்கமான நிகழ்வாக உள்ளது. இது வழக்கமான நிகழ்வு என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்,; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நடராஜர் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar