பழமையான திருமறைநாதர் கோயிலில் வானரம் : பிடிக்குமா வனத்துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2023 03:05
மேலுார்: திருவாதவூரில் அரிமர்த்தன பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு என பல தனிச்சிறப்புகள் உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக் கோயிலில் தற்போது வானரங்கள் குடும்பம் குடும்பமாக வசிப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களை பறிக்கிறது. தர மறுக்கும் பக்தர்களை விரட்டி கடிக்கிறது. தவிர குழந்தைகளை விரட்டுவதோடு பிரசாத பொருட்களை எடுத்து செல்கிறது. அதனால் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்கு பக்தர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். வனத்துறையினர் கோயிலில் உள்ள வானரங்களை பிடித்து வனத்தில் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பாகும்.