மன்னர் திருமலைநாயக்கர் மதுரையை ஆட்சி செய்த போது அரசுப்பணியில் இருந்தவர் அழகிய மணவாளதாசர். இவருக்கு பிள்ளைப்பெருமாள் என்றும் பெயருண்டு. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தவிர்த்த வேறெந்த தலத்திலுள்ள பெருமாளையும் வழிபடுவதில்லை என இவர் சபதம் செய்திருந்தார். ஒருமுறை, ‘அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை (வெங்கடாஜலபதி) பாட மாட்டேன்’ என்றும் கூறினார். இந்நிலையில் மணவாளதாசர் கண்டமாலை என்னும் நோயால் அவதிப்பட்டார். தவறுக்கு மனம் வருந்தி ஏழுமலையானின் திருவடியைச் சரணடைய நோய் மறைந்தது. அதன் பின் சபதத்தை கைவிட்டு திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை என்னும் பாடல்களைப் பாடினார்.