கோயிலில் தரப்படும் திருநீறை சாம்பல் என அலட்சியமாக கருதக் கூடாது. நம் உடல் சாம்பலாகும் என்பதை உணர்ந்து, ஆணவம் இன்றி வாழச் செய்வது இது. பூசும் போது விநாயகா, சிவா, முருகா என கடவுளின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். பூசிய பின் மீதி திருநீறு இருந்தால் அதை கோயில் துாண்களில் வைப்பது, காற்றில் ஊதி வீணாக்குவது பாவச்செயல். வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.