Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவடிக்குப்பம் குரு சித்தானந்த ... வடபழநி ஆண்டவர் கோயிலில் வைகாசி தேரோட்டம்; ஜூன் 2ல் விசாக விழா வடபழநி ஆண்டவர் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிசும்பசூதனி சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிசும்பசூதனி சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

29 மே
2023
05:05

திருப்புவனம்: திருப்புவனத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நிசும்பசூதனி சிற்பம் கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்புவனம் அருகே திருமணப்பதி கிராமத்தில் தென்னக வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழு கள ஆய்வு மேற்கொண்ட போது முற்கால பாண்டியர் கால விநாயகர் சிலையும், பிற்கால பாண்டியர்கள் கலைப்பாணியில் அமைந்துள்ள நிசும்பசூதனி சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் நிசும்பசூதனி சிற்பம் நான்கு அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் இருபுறமும் தலா நான்கு கரங்கள் வீதம் எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கேடயம், வில், அம்பு, மணி போன்ற ஆயுதங்களை தாங்கியுள்ளது. நிசும்பசூதனியின் இடையில் கச்சமும், காதில் பத்ரகுண்டலமும், தோள் வலை மற்றும் தோள் மாலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உத்குதி ஆசனத்தில் காணப்படும் இச்சிற்பம் பிற்கால பாண்டியரின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிற்பத்தின் அருகிலேயே முற்கால பாண்டியர் கால விநாயகர் சிற்பமும் லலிதாசன கோலத்தில் பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள நான்கு கரங்களுடன் வலது கரத்தில் மருவும், இடது கரத்தில் பாச கயிரும் உள்ளது. தும்பிக்கையால் மோதகத்தை எடுத்தபடி உள்ள இந்த விநாயகர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறுது. மதுரைக்கு வெகு அருகில் இருப்பதால் பண்டைய காலத்தில் திருமணப்பதியும் நகரமாக இருந்திருக்க கூடும் என கருதப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar