கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி தெருவடைச்சான் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2023 13:21
கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழாயொட்டி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் வைகாசிப் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வீதியுலா நடக்கிறது. 5ம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலை அதிகார கோபுர தரிசனம் நடந்தது. இரவு 12:00 மணிக்கு சோமாஸ்கந்தர், பராசக்தி அம்மன், வள்ளி தேவசேனா சமேத முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யானை வாகனத்தில் நால்வர் புறப்பாடு, இரவு இந்திர விமானத்தில் சாமி வீதி உலா, புதன்கிழமை திருக்கல்யாணம் பரிவேட்டை நடக்கிறது. 9ம் நாள் விழாவான 2ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம்நடக்கிறது.