Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆழ்வார்குறிச்சி கோயிலில் கருட சேவை தூய மிகாவேல் ஆலய பிரதிஷ்டை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லநாடு பெருமாள் கோயிலில் கருடசேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2012
11:09

வல்லநாடு: வல்லநாடு பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிகிழமையை முன்னிட்டு கருட சேவைகள் நடந்தது. ஒவ்வோரு ஆண்டும் வல்லநாடு பகுதி பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட சேவைகள் நடப்பது வழக்கமாகும். வல்லநாட்டிலுள்ள ஆழிவிளங்கும் என்ற சக்ரபாணி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் முக்கியமான ரதவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் வல்லநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆழிவிளங்கும் என்ற சக்ரபாணி பெருமாள் கோயில் கைங்கரிய கமிட்டியினர் மற்றும் மக்கள் இணைந்து செய்தனர். வல்லநாடு அருகேயுள்ள அகரம் அஞ்சேல் என்ற தசவதார பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து இரவில் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் முக்கியமான வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அஞ்சேல் பெருமாள் கோயில் கமிட்டினர் மற்றும் அகரம் மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
சபரிமலை; வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar