Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரத்தில் காஞ்சி பெரியவர் ... திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் கிரிவல நாட்களில் தவிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் கிரிவல நாட்களில் தவிக்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
12:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து, பக்தர்கள் ஊர் திரும்ப, போதிய எண்ணிக்கையில் பஸ் இயக்கப்படாததால், சாலை மறியல் நடப்பது தொடர் கதையாகி விட்டது. இது தெரிந்தும், போக்குவரத்து அதிகாரிகள் நிரந்தர தீர்வு காணாமல், பக்தர்களை தவிக்க விடுவது, வேதனை அளிக்கிறது. திருவண்ணாமலையில் வைகாசி பவுர்ணமி திதி நேற்று முன்தினம் காலை, 10:54 முதல், நேற்று காலை, 10:20 மணி வரை இருந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, ஐந்து மணி நேரத்துக்கும் மேல் கோவிலில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஊர்களுக்கு செல்ல பஸ் ஸ்டாண்டுகளுக்கு சென்றால், அங்கும் கூட்டம் அலைமோதியது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தவித்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால், சிறுவர்கள், குழந்தையுடன் வந்தவர்களும், முதியவர்களும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் பஸ் இல்லாததால் ஆத்திரமடைந்த பக்தர்கள், திருவண்ணாமலை – சென்னை வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி, நேற்று காலை, 9:00 மணிக்கு, ரயில்வே மேம்பாலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வழக்கமாகவே கிரிவல நாட்களில், இதுபோல் மறியல் நடப்பது பல ஆண்டுகளாகவே தொடர்கதையாக உள்ளது. ஆனால், போக்குவரத்து அதிகாரிகள் தீர்வு காணாமல் மெத்தனம் காட்டுகின்றனர். குறிப்பாக அரசு பஸ்களை நம்பி கிரிவலம் செல்லும் பக்தர்கள், மாளாத வேதனையுடனே, ஊர் திரும்பும் நிலை உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar