உழைப்பவரின் வியர்வை உலர்வதற்கு முன்பே அவருடைய கூலியைக் கொடுங்கள். * பணியாளர்கள் உங்கள் சகோதரர்கள். அவர்களைக் கண்ணியமாக நடத்துங்கள். * நீங்கள் உண்பதும், உடுத்துவதையும் உங்கள் பணியாளருக்கும் கொடுங்கள். * பணியாளர்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அடைக்கலச் சொந்தங்கள். அவர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள். * பணியாளர்களை குறித்து இறைவனிடம் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். – பொன்மொழிகள்