அன்னூர்; மூக்கனூர், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மூக்கனூர் அரச மரத்து ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 6:00 மணிக்கு யாத்ரா தானம், குடங்கள் ஆலயத்தை வலம் வருதல் நடந்தது. காலை 9:15 மணிக்கு, விநாயகருக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சக்தி விநாயகருக்கு, மகா அபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு சவுடேஸ்வரி அம்மன் குழுவின் பஜனை நடனத்துடன் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், மூக்கனூர், குன்னியூர், சிறுமுகை உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.