காரைக்கால்: காரைக்காலில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி நித்ய கல்யாணபெருமாள் ஆணிரை கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவி லில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரண்டாம் சனிக்கிழமையை யொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பின், நித்ய கல்யாண பெருமாள் பசுவை காக்கும் ஆணிரை கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி மற்றும் நித்ய கல்யாணபக்தஜன சபாவினர் செய்திருந்தனர்.