பதிவு செய்த நாள்
14
ஜூன்
2023
11:06
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 14 லட்சம் கிடைத்தது. பழநி முருகன் கோயிலில் ஜூன் 12,13 ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஜூன் 13ல் காணிக்கையாக 465 கிராம் தங்கமும், 4.812 கிலோ வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.1 கோடியே 96 லட்சத்து 60 ஆயிரத்து 894, மற்றும் 198 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இருநாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 1.330 கிலோ தங்கமும்,16.832 கிலோ வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.4 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 524, மற்றும் 465 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்கள் பொன் சாமிநாதன், லட்சுமி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.