வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. வெயிலின் தாக்கத்தால் ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்களே சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். நேற்று காலை 7:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் மதியம் 12:00 மணி வரை ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்களை மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மாலை 4:30 மணிக்குமேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.