அபிஷேகம் செய்வதற்காக திருப்பதி மலையிலுள்ள பாபவிநாச தீர்த்தத்தில் திருமலைநம்பிகள் தண்ணீர் எடுப்பது வழக்கம். ஒருநாள் மண்குடத்தில் நீர் சுமந்து வந்தார் நம்பிகள். வழியில் வில்லும் அம்புமாக வேடனாக தோன்றி, ‘‘ ஐயா! தாகம் தீர தண்ணீர் தருவீரா?’’ எனக் கேட்டார் பெருமாள். ‘‘ இது புனிதமான தீர்த்தம். திருப்பதி வேங்கடவனுக்கு உரியது’’ என்று சொல்லி நடந்தார். ஆனால் குடத்தின் பின்புறம் அம்பால் துளையிட்டு நீரைக் குடித்தார். இதைக் கண்ட நம்பிகள் மிக வருந்தினார். அப்போது அம்பால் பூமியில் துளைத்து தண்ணீ்ர் பெருகச் செய்து, ‘ஆகாச கங்கையான இதில் தீர்த்தம் எடுத்து அபிேஷகம் செய்யுங்கள்’’ என சுயரூபத்தைக் காட்டினார் பெருமாள். ஆகாச கங்கை, பாபவிநாசம் என்னும் இந்த இரு தீர்த்தங்களிலும் இன்றும் பக்தர்கள் நீராடுகின்றனர்.