கொட்டகையில் ஆடுகளை அடைத்து கொண்டிருந்தார் தந்தை. அங்கு வந்த அவரது ஏழு வயது மகன் தேவாலயத்திற்கு செல்ல வேண்டும் எனக் கேட்டான். அதற்கு அவரோ பெரியவன் ஆன பிறகு செல்லலாம். இப்போது ஆட்டுக் குட்டி ஒன்று குறைகிறது அதை பிடித்து வா என்றார் தந்தை. அதற்கு அவனோ குட்டி ஆடு தானே பெரியதாக வளரட்டும். அதன் பிறகு பிடித்துக் கொள்ளலாம் என்றான். அவன் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்து அனுமதி கொடுத்தார். குழந்தைகளிடம் பக்தியை வளருங்கள். ராஜ்யத்தை பயமின்றி ஆள்வார்கள்.