* சிரித்த முகத்துடன் பழகு. மகிழ்ச்சி பொங்கும். * உனது வாழ்க்கை குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன் தர வேண்டும். * பெற்றோரை விட சிறந்தவர் இவ்வுலகில் யாருமில்லை. * அன்பு, அறிவு என இரண்டும் அவை வெளிப்படும்போது மட்டுமே உணர முடியும். * பெரியவர்களை பார்த்தால் வணங்கு. முடியாவிட்டால் அவர்களை அலட்சியப்படுத்தாதே. * ஞானிகளைப் பழித்தவன் மறுபிறப்பில் பித்தனாகப் பிறப்பான். * இந்த பிறவியில் செய்யும் நன்மைகளை மறுபிறப்பில் அனுபவிப்பாய். * யார் கைவிட்டாலும், நீ செய்த தர்மம் உன்னைக் கைவிடாது. * பயிருக்கு முள் வேலியைப் போல், பணத்திற்கு தர்மம் வேலியாக இருக்கட்டும். * நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதே. * புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது. * எந்தப் பணியிலும் நிதானத்துடன் ஈடுபடு. வெற்றி பெறுவாய். * நல்ல எண்ணங்கள் இருக்கும் மனமே கடவுளின் கோயில். * கடவுளை அன்பினால் வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே. * மானம் காக்க ஆடையும், மனதைக் காக்க வழிபாடும் அவசியம்.