வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு: மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2023 04:06
சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார்பட்டி வாராஹி அம்மன் கோவிலில் இன்று(23ம் தேதி) பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு மஞ்சள் அரைத்தும், தேங்காயில் விளக்கேற்றியும் வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.