பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள், ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2023 04:06
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள், ஈஸ்வரன் கோயில்களில் ஜூன் 28 ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன் கோயில்) மற்றும் ஸ்ரீ கல்யாண சவுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நாளை துவங்குகிறது. இதன்படி ஈஸ்வரன் கோயிலில் நாளை மாலை 4:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து (ஜூன் 25) நாளை மாலை முதல் கால யாக பூஜைகளும, ஜூன் 28 அதிகாலை 3:00 மணிக்கு 6 ம் கால யாக பூஜைகள் துவங்கி 5:30 மணிக்கு மகாபூர்ணாகுதி நடக்கிறது. *இதேபோல் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை அனுக்கையுடன் விழா துவங்கி, ஜூன் 26 காலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் 28 காலை 5:30 மணிக்கு மகாபூணாகுதி நடக்கிறது. மேலும் இரண்டு கோயில்களிலும் ஜூன் 28 காலை 6:00 மணி முதல் 7:15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் அன்னதான விழா நடக்கிறது. விழாவையொட்டி ஜூன் 26, 27, 28 ஆகிய நாட்களில் இரவு 7:00 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.