துவார் வள்ளிலிங்க சுவாமி கோயில் ஜூலை 5ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2023 05:06
நெற்குப்பை: திருப்புத்தூர் ஒன்றியம் துவாரில் பூரண புஷ்கலை உடனாய வள்ளிலிங்க சுவாமி கோயிலில் ஜூலை 5-ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சுவாமி,அம்பாள், இரட்டை விநாயகர், சித்தி விநாயகர், சுப்பிரமணியர், செங்கிடாய் கருப்பர், முத்துக்கருப்பர் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளுக்கும் திருப்பணி நடந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் ஜூலை 3ல் காலை 9:00 மணிக்கு துவங்குகின்றன. மாலையில் முதற்கால யாக பூஜைகள் நடந்து இரவில் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மறுநாள் காலையில் இரண்டாம், மாலையில் மூன்றாம் யாகசாலை பூஜைகள் நடைபெறும். ஜூலை 5 காலையில் 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜைகள் துவங்கி காலை 9:10 மணிக்கு கடங்கள் புறப்பாடும், காலை 9:45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், காலை 10:05 மணிக்கு மூலவர் சுவாமி,பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.