Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் கோவில் கனகசபை சர்ச்சை ஏன்? ஆடியில் வரும் 2 அமாவாசை: எதில் பிதுர் கடன் எனும் தர்ப்பணம் செய்ய வேண்டும்? ஆடியில் வரும் 2 அமாவாசை: எதில் பிதுர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக திருப்பதி எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
தமிழக திருப்பதி எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2023
12:06

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (29ம் தேதி) வெகு விமர்சையாக நடந்தது.

தமிழக திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோவில் பூலோக வைகுந்தம், திருவிண்ணகர் என போற்றப்படுகிறது. இத்தலம் திருவேங்கடம் என்றும், திருப்பதியைப் போலவே பல்வேறு வகைகளில் பெரியதொரு பிரார்த்தனை தலமாகவும் விளங்கி வருகிறது. 14 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சன்னதிகள் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இத்திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் விழா ஜூன் 25ம் தேதி தொடங்கியது. இதில், காலையில் புண்யாஹவாசனம், ஸ்ரீசுதர்சன ஹோமம், வேத, திவ்யப்பிரபந்த, ஸ்ரீபாஷ்யாதிக்ரந்த பாராயணம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் முதல் கால யாக பூஜைகள் தொடங்கி, பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, ஜூன் 26 ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகள், மாலை மூன்றாம் கால யாக பூஜைகள், 27ம் தேதி நான்காம் கால யாக பூஜைகள், மாலை ஐந்தாம் கால யாக பூஜைகள், நேற்று  காலை ஆறாம் கால யாக பூஜைகள், மாலை ஏழாம் கால யாக பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, இன்று (29ம் தேதி) காலை புண்யாஹவாசனம், திருவாராதனம், ஹோமங்கள், யாத்ராதானம், பஞ்ச, தச தானங்கள், கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் விமான மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர், ஆராதனம், சாற்றுமுறை, ப்ரஹ்மகோஷம், ஆசீர்வாதம், யஜமான ஆச்சார்ய மரியாதை, பொது ஜன சேவை, இரவு 7 மணிக்கு பெருமாள் தாயார் தங்க கருட சேவை, திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெறவுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar