Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானானந்தா நிக்கேதனில் வியாச பூஜை பரமக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் பால்குடம் நேர்த்திக்கடன் பரமக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில் சிலை பிரதிஷ்டை; வழிபாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
3 ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில் சிலை பிரதிஷ்டை; வழிபாடு துவக்கம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
04:07

செஞ்சி: செஞ்சி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாதேவ ஈஸ்வரன் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு விழா நடத்தினர்.

செஞ்சி பகுதியில் இருந்த ஏராளமான கோவில்கள் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டன. இதன் பிறகு கோவில்களை புதுப்பிக்காமல் பாழடைந்த அழிவின் விளிம்பில் ஏராளமான கோவில்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற கோவில்களில் சில வற்றை அந்தந்த பகுதி மக்கள் திருப்பணிகள் செய்த மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதே போல் செஞ்சியை அடுத்துள்ள திருவதிகுன்னம் மலை மீது பாழடைந்து புதர் மண்டி இருந்த சிவன் கோவிலை திருப்பணி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மலை மீது செல்வதற்கே வழி இல்லாமல் புதர்மண்டி காடுபோல இருந்த பகுதியை கடந்த ஒரு ஆண்டாக செப்பனிட்டு இன்று திருப்பணி துவக்க விழா நடத்தினர். சிவகாமி உடனுரை மகாதேவ ஈஸ்வரர் என பெயரிட்டு நேற்று மாலை 6 மணிக்கு முதல் கால வேள்வியும், இன்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 9 மணிக்கு மகாதேவ ஈஸ்வரரை பிரதிஷ்டை செய்து திருக்குட நன்னீராட்டும் நடந்தது. 10.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், தமிழ்நாடு திருக்கோவில் கூட்டமைப்பு தலைவர் பாபு மற்றும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அரங்காவலர்கள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கோவை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன மடம் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் கோயிலில் ... மேலும்
 
temple news
கும்பகோணம்: நவகிரக கோயில்களில் ராகு பரிகார ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar