Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானானந்தா நிக்கேதனில் வியாச பூஜை பரமக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் பால்குடம் நேர்த்திக்கடன் பரமக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில் சிலை பிரதிஷ்டை; வழிபாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
3 ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில் சிலை பிரதிஷ்டை; வழிபாடு துவக்கம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
04:07

செஞ்சி: செஞ்சி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாதேவ ஈஸ்வரன் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு விழா நடத்தினர்.

செஞ்சி பகுதியில் இருந்த ஏராளமான கோவில்கள் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டன. இதன் பிறகு கோவில்களை புதுப்பிக்காமல் பாழடைந்த அழிவின் விளிம்பில் ஏராளமான கோவில்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற கோவில்களில் சில வற்றை அந்தந்த பகுதி மக்கள் திருப்பணிகள் செய்த மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதே போல் செஞ்சியை அடுத்துள்ள திருவதிகுன்னம் மலை மீது பாழடைந்து புதர் மண்டி இருந்த சிவன் கோவிலை திருப்பணி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மலை மீது செல்வதற்கே வழி இல்லாமல் புதர்மண்டி காடுபோல இருந்த பகுதியை கடந்த ஒரு ஆண்டாக செப்பனிட்டு இன்று திருப்பணி துவக்க விழா நடத்தினர். சிவகாமி உடனுரை மகாதேவ ஈஸ்வரர் என பெயரிட்டு நேற்று மாலை 6 மணிக்கு முதல் கால வேள்வியும், இன்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 9 மணிக்கு மகாதேவ ஈஸ்வரரை பிரதிஷ்டை செய்து திருக்குட நன்னீராட்டும் நடந்தது. 10.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், தமிழ்நாடு திருக்கோவில் கூட்டமைப்பு தலைவர் பாபு மற்றும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அரங்காவலர்கள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar