* குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்தாலும், அதில் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். * அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசி. * யாருடைய குறையையும் பெரிதுபடுத்தாதே. மன அமைதி கிடைக்கும். * உனக்கு தேவையான வலிமை உன்னிடமே உள்ளது. * நீண்ட துாரம் ஓடினால் மட்டுமே அதிக உயரம் தாண்டமுடியும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும். * நல்ல எண்ணங்களை வைத்து மனதை தினமும் சுத்தப்படுத்து. * பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்ல மாட்டிக்கொள். ஏனெனில் பொய் வாழவிடாது. உண்மை சாகவிடாது. * தனக்குத்தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல. * பிறர் முதுகுக்குப் பின்னால் நீ செய்ய வேண்டியது, தட்டிக்கொடுப்பது மட்டும்தான். * எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய். மனதின் ஆற்றல் அளப்பறியது. * உனக்கென ஒரு லட்சியத்தை தேர்ந்தெடு. அதை அடைய முயற்சி செய். * தீமையிலிருந்தும் பல பாடங்களை மனிதன் கற்கிறான். * அன்பின் மூலம் செய்யப்படும் செயல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். * உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. * நீ செய்யும் செயலை வைத்தே எதிர்காலம் அமைகிறது. * உடலையும், மனதையும் நல்லபடியாக வைத்துக்கொள்