நத்தம், நத்தம் தெலுங்கர் தெருவில் உள்ள காளியம்மன், பாலகணபதி, சாத்தாவுராயன், பாலமுருகன் கோவில்களில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கபட்டு கணபதி ஹோமம் நடத்தபட்டது. தொடர்ந்து காளியம்மனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நத்தம் தெலுங்கர் தெரு பகுதி மக்கள் செய்திருந்தனர்.