பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கம்பம் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 11:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு சாட்டுதலுடன் கம்பம் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கவுமாரியம்மன் ஆயிரம் கண்ணுடையாளாகவும், பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம், வேண்டிய வரம் வழங்கி அருள் பாலிக்கிறார். கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. ஆனி திருவிழாவை முன்னிட்டு சாட்டுதலுடன் கம்பம் நடும் விழா நேற்று நடந்தது. செயல்அலுவலர் ராமதிலகம், பூஜாரி ராஜசேகர், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 10 கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா துவங்குகிறது. தினமும் அம்மன் குதிரை, ரிஷபம், சிம்மம், அன்னபட்சி, யானை, மின் ஒளி, பூ பல்லாக்கில் உலா வருவார். முக்கிய திருவிழாவான ஜூலை 18 மாவிளக்கு உற்சவமும், மறுநாள் அக்கினிசட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஜூலை 25ல் மறுபூஜை பாலாபிஷேகம் நடக்க உள்ளது.